உலகமயத்தின் சித்தாந்தப் போராட்டம் முன் வைக்கும் பிரச்சினைகளை இந்நூல் நான்கு பகுதிகளில் விளக்குகிறது. முதலாவது பகுதி, உலக மயத்தின் சித்தாந்தம் உலகமயத்தின் இன்றைய வளர்ச்சி நிலையில் விளக்கப்படுகிறது. இரண்டாவது பகுதி, இன்றைய ஏகாபத்திய சித்தாந்தங்களுக்கு அடிப்படையாய் அமைந்த முன்னோடிகளை அறிமுகப்படுத்துகிறது. வர்க்க சமூகம் எதிலும் ஆளும் வர்க்கங்களின் சித்தாந்தங்கள் பெருமளவு ஒரே போக்கில் சென்றுள்ளதைக் காட்டவும், இன்றைய ஏகாதிபத்திய சமூகவியலின் ஆதாரங்களை விளக்கவும் இது தேவைப்படுகிறது. மூன்றாவது பகுதி, இருபதாம் நூற்றாண்டில் ஏகாதிபத்தியத்தின் சமூகவியலை விளக்குகிறது. நூலின் இறுதிப்பகுதி நமது சமகால நிலைமைகளில் ஏகாதிபத்தியம் முன் வைக்கும் சித்தாந்தங்கள் விவரிக்கிறது.