அக்காலத்தில் கூடித்தொழில் செய்து பாடி மகிழ்ந்தனார். கூட்டாஞ்சோறு ஆக்கி கூடியிருந்து உண்டு மகிழ்ந்தனர். கதைகள் சொல்லி மௌனம் கலைத்து, கலகலப்பாக இருந்தனர். ஊர் வம்பு பேசாமல் கதைகள் சொல்வதன் மூலம் உள்ளத்தைப் பக்குவம் செய்தனர். கிராமங்களில் கதைகள் பரம்பரைச் சொத்தாகப் பாதுகாக்கப்பட்டன. தாத்தா-பாட்டி சொல்லும் கதைகளைச் சிறுவர்கள் கேட்பதால் சிந்திக்கும் திறனை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பு இருந்தது. இன்று சிறுவர்கள் தொலைக்காட்சிப் பெட்டியின் முன் அமர்ந்து நேரத்தைத் தொலைக்காமல் இருக்க, கதைகள் சொல்லி அவர்களைக் கவர்ந்திட தமிழக நாட்டுப்புறக் கதைகள் பயனுள்ளதாக இருக்கும்.