ஒரு குழந்தையின் ஆரோக்கியமும் , எதிர்காலமும் அந்நாட்டின் சுகாதாரத்தைப் பொறனுத்து அமைகிறது. குழந்தை கரு உருவாவதிலிருந்து பிறக்கும் வரையும் பிறந்த பின்பு கடைப்பிடுக்க வேண்டிய மருத்துவ முறைகளையும் இந்நூல் நன்கு தெளிவுப்படுத்துகிறது. நள்ளிரவில் குழந்தை வீர்' என்று கத்தியபடி அழுதால் பெற்றோர் ஓடி வந்து தூக்கி தோளில் போட்டுக் கொண்டு 24 மணிநேர மருத்துவமனையைத் தேடி ஓருவர். அங்கு போனால் சிறிய சிகிச்சையாகத்தானிருக்கும். இதுவே கிராமங்களில் நிகழ்ந்தால் தாத்தாவோ பாட்டியோ உடனடியாக ஒரு ரெடிமேடு மருத்தைக்கலக்கிக் கொடுத்து குழந்தையின் அழுகையை நிறுத்திவிடுவர். இதுதான் நகரத்திற்கும், கிராமத்திற்கும் உள்ள வித்தாயாசம்.
ஆங்கில மருத்துவமில்லாது எப்படி குழந்தைகளை காப்பாற்ற முடியும் அல்லது உடனடி வைத்தியம் எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்நூலாசிரியர் திரு. எஸ். சதானந்தம் அவர்கள் மிகத் தெளிவாகவும் செய்முறை விளக்கங்களோடும் செய்து காட்டி, குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு வழிகாட்டுகிறார்.
- பதிப்பகத்தார்.