கன்னட நாடக ஆசிரியரான கிரீஷ் கார்னாட் சமூகப்பின்னணியில் எழுதிய
நாடகங்களில் ‘அஞ்சும் மல்லிகை’ மிக முக்கியமானது. அஞ்சும் மல்லிகைகளாக
வெளிநாட்டுக்குச் சென்ற அக்காலத்து இளந்தலைமுறையினரின் குழப்பங்களையும்
கனவுகளையும் இன்பங்களையும் துன்பங்களையும் சிறுசிறு காட்சிகளாக
முன்வைக்கிறது நாடகப்பிரதி. ஒருபுறம் நிறவேற்றுமையால் உருவாகும்
கசப்புகளுக்கும் தடுமாற்றங்களுக்கும், மறுபுறம் பால்யத்தில் நிகழ்ந்த
பாலியல் பிறழ்வனுபவத்தை நினைத்து வதைபடுவதால் நேரும் நிலைகுலைவுகளுக்கும்
இடையில் வாழ்க்கை ஊசலாடுகிறது.