என்ன, இந்தப் பயல்கள்... தான் ஆசைப்படும் பெண் பிள்ளைகளுக்கும் ஆயிரம் கனவுகள், பொறுப் புகள் இருக்குமென்று தெரிந்து கொள்ள வேண்டாமா? ஏற்றி வைத்த தீபங்களைப் பேய்க்காற்று வீசி அணைப்பது போலக் காதல் என்ற கல்லை வீசி, அவளின் குறிக் கோளில் சலனங்களை ஏற்படுத்தி, லட்சிய தீபத்தை அணைக்க முயலுகிறான். அதற்கு நான் ஏன் இடம் தர வேண்டும்? ஆயிரம் தடைகள் வந்தாலும் லட்சியம் முக்கியமில்லையா?