என்னென்றும் உற்சாகம்! புதிது புதிதாக புத்துணர்ச்சியோடு சிந்திப்பதை தனது இயல்பான சுவாசமாய், மாறாத அடையாளமாய் கொண்டிருக்கும் புதுமைப் பித்தனாய், எளிமையான அபூர்வமான படைப்பாளியாய் திகழும் எனது பெருமைக்குரிய நண்பர் திரு.இராதாகிருஷ்னன் பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் மிகப்பெரிய வெற்றியையும் பாராட்டையும் பெற்றது. இந்த அழகான ஆரோக்யமான திரைப்படத்திற்கு திரு.பார்த்திபன் அவர்கள் அமைத்திருந்த புதுமையான திரைக்கதை எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது.
- இயக்குநர் மகேந்திரன்