வாழ்க்கையில் வெறுப்பு, அன்பின் அழிவு சமூக வாழ்க்கையின் அடித்தளமான ஆண்
பெண் கூட்டு வாழ்க்கை நசிந்து, குரோதம் மிகுந்து கொலை விழுதல் ஆகியவை
இந்தக் காட்சியில் சொல்லப்படுகின்றன. பாம்பின் வாழ்நாளே விஷமயமாகி
விடுகிறது. அது தன்னைப் புழுவாக அறிகிறது. இரண்டும் தாங்கள் பாம்பென்ற
அடையாளத்தையே இழந்து விட்டிருக்கின்றன. கூட்டுவாழ்க்கை சிதைவு, பரஸ்பர
விரோதம், அடையாள இழப்பு ஆகிய இந்த நூற்றாண்டு மனித வாழ்க்கையின் அவலங்களை
இந்தக் காட்சி காட்டுகிறது.