ஒரு செய்தியையோ, சம்பவத்தையோ, முறைகேட்டையோ கண்டுபிடிக்கும் பொருட்டு
பல்வேறுபட்ட பாத்திரங்களை புலனாய்வாளர் ஏற்க வேண்டியிருக்கிறது. பல்வேறு
சிக்கல்களை, துயரங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. வழக்குகளை எதிர்கொள்ள
நேர்கிறது. மேலும், குற்றம் இழைத்தவரின் சுபாவம், உணர்வெழுச்சி, சூழல்
போன்றவை இயல்பான மனிதரிலிருந்து மாறுபட்டு இருப்பதால், அவரின் ஆழ்மனதை
புலனாய்வாளர் உற்று நோக்க வேண்டியிருக்கிறது. ஒரு எழுத்தாளரைவிட
புலனாய்வாளரின் களச்செயல்பாடு அதிகம். இவ்வாறான செய்திகளை புலனாய்வாளரின்
குறிப்புகளாக, தன்வரலாறு போல சொல்கிறது இந்நூல்.
-தமிழ் முதல்வன்