புதிய ஒளி நாடக நூலில் ஐந்து நாடகங்கள் உள்ளன. நாடகக் கலைஞர் நண்பர் பேராசிரியர் கி.பார்த்திபராஜா எழுதியுள்ள இவை சிரிப்பு உருவாக்கவும் பொழுது போக்கிற்காகவும் போடப்பட்டு வரும் நாடகங்களிருந்து வேறுபட்டுள்ளவை. இன்றைய சமூகத்திற்கும் நாளைய உலகுக்கும் முன் வைக்க வேண்டிய பல உயரிய தேவையான சிந்தனைகளை இந்நாடகப் பிரதிகளை வாசிப்போர் உணர்ந்தறிய வாய்ப்பினை நாடக ஆசிரியர் கி. பார்த்திபராஜா ஏற்படுத்தியுள்ளார்.