என் நினைவில் சே (சே குவேராவுடன் என் வாழ்க்கை) - அலெய்டா மார்ச்(சே- வின் மனைவி) :
அலெய்டா மார்ச் முதல்முறையாக இந்த நூலில் தன்னுடைய துணைவரான எர்னஸ்டோ சே குவேரா பற்றி நினைவுகூர்கிறார்.
தங்களுடைய அற்புதமான காதலை, கியூபப் புரட்சிப் போரின்போது ஒரே குழுவைச் சேர்ந்த கொரில்லாக்களாக முதன்முதலாகச் சந்தித்துக் கொண்ட நாட்களில் தொடங்கி பத்து ஆண்டுகள் பூர்த்தியடையாத ஒரு காலகட்டத்தில் பொலிவியாவில் சே படுகொலை செய்யப்பட்டதைக் கேள்வியுற்ற துயரமான கணம் வரை அவர்கள் இணைந்து நடத்திய வாழ்க்கையினூடாக அவர் வவரிக்கிறார்.