சிவகுமாரின் மொழிபெயர்ப்பைப் படிக்கும்போது அவரது உண்மை உணர்ச்சி, மூலச்
சொற்களுக்குத் தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடிப்பதில் எடுத்துக்கொண்டிருக்கும்
சிரத்தை, தன் பணியின் மீது வைத்திருக்கும் மதிப்பு இவற்றை உணர முடிகிறது.
ஒவ்வொரு கதையை மொழிபெயர்க்கவும் அக்கதை கேட்கும் உழைப்பை
அளித்திருக்கிறார். கான்ரட் எய்க்கினின் கதை அதிகச் சவாலைத் தரக்கூடியது.
ஆனால் பிரச்சினைகள் இல்லாமலும் மூலத்தின் நுட்பங்களை இயன்றவரை
விட்டுக்கொடுக்காமலும் மொழிபெயர்ப்பு கூடி வந்திருக்கிறது.