பாரத பூமியில் விவாகச் சடங்கு என்பது மிக உன்னதமான, பவித்ரமானதொரு பாகமாகும். அந்தச் சடங்கின் போது, மணமக்கள்
தங்களுடைய வாழ்க்கையை மிக நன்றாக , ஆனந்தமயமாக பிணியற்ற தொன்றாக அமைத்துக்கொண்டு, மக்கட்பேற்றைப் பெற்று
சந்தோஷமாகக் கழிக்க வேண்டும் என்பதே நோக்கம். அதற்காக தேவதைகளையும் , திக்பாலகர்களையும் ஆவாஹனம் செய்து அவர்களை வணங்கி அவர்களுடைய ஆசிகளுடன் பெரியவர்களின் ஆசிகளையும் பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் சடங்குகள் நடைபெறுகின்றன. நமது ஜாதக சக்கரத்தில் நாம் எந்த சமயத்தில் எந்த ராசியின் அடிப்படையில் இருக்கின்றோமோ அந்த ராசியின் அதிபதியாக உள்ள கிரகத்தின் குணாதிசயங்களுக்கு ஏறப, கஷ்ட சுகங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும். ஆகவே கிலக ஸ்திரி சரியாக இல்லா விடில் நாம் எதுவும் செய்ய இயலாது. ஆகவே சாமான்ய மானிடன் தமது வாரிசுகளின் விவாகத்தை நிர்ணயிக்கு முன்பாக ஜாதக சக்ரத்தை ஆராய விரும்புகிறான். இதையெல்லாம் உத்தேசித்து நான் மக்களுக்குப் புரியும் மொழியில் இலகு பாஷையில் இந்த சாஸ்திரத்தைப் பற்றியும் எப்படி பொருத்தம் பார்க்கலாம் என்பதையும் சுலபமான முறையில் இந்த புத்தகத்தில் கொடுத்திருக்கின்றேன்.
- பதிப்பகத்தார்.