நகரத்தில் செட்டிநாடு ஸ்பெஷல் ஹோட்டல்கள், உணவுகள், பொடி வகைகள் -பலகாரங்கள்- இல்லாத இடங்கள் இல்லை.
ஆனால், எல்லாவற்றையும் எப்பொழுதும் விலைக்கு வாங்கி உபயோகிக்க முடியாது. அதை நாமே செய்யக்கற்றுக் கொள்வதுதான் சிறந்த வழி. முன்பு போல பெரியவர்கள், சிரியவர்களுக்கு சமையல் கற்றுத் தருதல் என்பது இன்றைய அவசர காலக்கட்டத்திற்கு ஒத்து வருவதில்லை. அதனால்தான் இந்த புத்தக முயற்சி. சமையல் குறிப்பு எழுதும் பொழுது முக்கியமாக்க் குறிப்பிடவேண்டிய ஒன்று -எல்லா அளவுகளையும் துல்லிநமாக்க் கூற முடியாது. ருசி பார்த்து தண்ணீர்.உப்பு,காரம் கூட்டிக் குறைத்து சரி செய்து கொள்ள வேண்டும் பின் காலப்போக்கில் கை பழகிவிடும். நடைமுறை வாழ்க்கையில் நாம் சமைக்கும் சில உணவுகளின் செய்முறைகளை இங்கு காணலாம்.