இந்திய உணவு வகைகளை உலக நாடுகளில் அறிமுகப்படுத்தும சீரிய நோக்கில் பல ஆண்டுகளாய் பல நாடுகளிலும் உணவியல்
கருத்தரங்குகளையும் காட்சி அரங்குகளையும் நடத்தி வருகிறார். 2000 ஆவது ஆண்டில் இவரது பணியைப் பாராட்டி வழங்கப்பட்ட Rajiv gandhi excellency award இவரது சாதனை மகுடத்தில் பதிக்கப்ட்ட ஒரு மாணிக்கம். இப்புத்தகம் உருவாவதற்கு பெரிதும் உதவிய திரு.c.p.செந்தில் குமார், திரு. M.R சங்கர் மற்றம் MGR ஹோட்டல் மேலாண்மை கல்வி கற்பிக்கும நிறுவனத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளேன். என்னுடைய பல ஆண்டுகால அனுபவத்தின் அடிப்படையில் பலவிதமான நவீன சமையல் குறிப்புகள் தயாரித்து இப்புத்தகத்தில் விளக்கியுள்ளேன். அவைகள் சுவையாகவும் தயாரிப்பதற்கு எளிதாகவும் சுலபமாகவும் இருக்கும் என்று நம்புகிறேன். அவைகளுள் பெரும்பாலானவைகளின் பெயர்கள் தற்கால ஹோட்டல்களிலும், உணவகங்களிலும் மெர்தும் பேசப்படுபவைகளாகும்.உணவுப்பொருள்களை சூடுபடுத்தப்படும் பொழுதோ அல்லது குளிர்படுத்தப்படும்பொழுதோ என்னென்ன மாறுதல்கள அடைகின்றன என்பதை புரிந்து கொள்வதின் மூலம் விதவிதமான உணவு தயாரிப்புகளில் இப்பொருள்களின் கலவையின் பயனை தெரிந்து கொள்ளலாம். தம்வீட்டில் இருக்கும் உணவுப் பொருள்களைக் கொண்டே உடனடியாக எவ்வித உணவையும் நம்மால் தயாரிக்க முடியும் என்பதன் ரகசியமே இதுதான்.
கே. தாமோதரன்.