வசந்த பைரவி இரு வெவ்வேறு சூழ்நிலையில் விதியின் கட்டாயத்தில் வளர்பவர்கள், சந்தர்ப்ப வசத்தால் மீண்டும் சந்தித்தால்?தாய், மகன், மகள் இவர்களை சுற்றி கதை படர்கிறது. இவர்களிடையே நடக்கும் பாசப் போராட்டம், மேலும் கொஞ்சம் காதல் கலந்த அழகான குடும்பக் கலவை. இந்தியாவில், பாடகி சாரதா ராமமூர்த்திக்கு பிறந்த வசந்துக்கும், அமெரிக்காவில் வசிக்கும் கமலா, விஸ்வநாதன் தம்பதியரின் புதல்வி பைரவிக்கும் உள்ள பந்தம் சங்கீதத்தில் அறிமுகமாகிறது. அமெரிக்காவிலிருந்து தன் சகநண்பன் அஜய்யுடன் கர்னாடக சங்கீதம் கற்க என்று வரும் பைரவி, சாரதா குடும்பத்துள் கலந்து உறவாட அழகான பாசப்பிணைப்பு அவர்களுக்குள் அங்கே மலர்கிறது. அவள் வந்த உண்மையான நோக்கம் நிறைவேற அவள் கடந்து போகும் பாதை, அதனால் விளையும் திடீர் திருப்பம், புயலாய் அந்த குடும்பத்தை அலைக்கழிக்கிறது. அந்த போராட்டத்தில் சிக்கிய வசந்த், பைரவி, சாரதாவின் நிலை.? மூடி மறைத்த கதை அங்கே வெளியேறி அனர்தனங்களை விளைவிக்கிறது. வசந்த், பைரவி என்ற இராக ஆலாபனையில் இணையத் துடிக்கும் அஜய்,மஹதி, ஆனந்த்,கவிதா, இன்னும் பலர் அதில் பயணிக்க, வசந்தபைரவி இசைந்ததா??...... படித்து மகிழுங்கள்.