வாழ்க்கையில் வெற்றியின் உச்சத்தை அடைந்தவர்கள் வழக்கமாக சிந்திக்காமல் மாறுபாட்டுச் சிந்தித்ததால்தான் வெற்றி பெற்றிருப்பார்கள். கற்பனைத்திறன் படைப்பாற்றல் என்பது வரமல்ல. வளர்த்துகொள்ளக் கூடிய ஒரு கலை. யாராலும் முடியும். உங்களாலும் கூட! தானாக மட்டுமல்ல, சில பயிற்சிகளின் மூலம் அப்படி உதிக்கச் செய்ய முடியும். பத்தோடு பதினொன்றாக இருப்பதைவிட ஆயிரத்தில் ஒருவனாக இருப்பதில்தானே உங்களுக்கும் சந்தோசம்?