வரலாறு நெடுகிலும் மண்ணுக்காகத்தான் பெரும்போர்களும்,கொலைகளும் நடந்து கொண்டேயிருக்கின்றன. நம் காலில் மிதிபடும் வெறும் மண் அல்ல இது. இதன் வரலாறும், தொடர்ச்சியும், அதன் பயனும், வகைகளும் நம்மை என்றென்றும் ஆச்சர்யப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. மண். மண்புழு, இயற்கை உரம் என்று விரிந்து செல்லும் பாமயனின் இந்த உரைநடை, மண்ணை நேசிக்கிற ஒவ்வொருவரும் தங்கள் கையிலேயே வைத்திருக்க வேண்டிய உயிர்க் கையேடு.