தமிழ்
மொழி எவ்வளவு பழமையானது! உலக மொழிகளில் தலைமை தாங்கும் பண்புடையது.
உயர்தனிச் செம்மொழிகளில் உயிருடன் இயங்கிவரும் சிறப்புடையது ஆகும்.
பேராசிரியர் க.முத்துச்சாமி அவர்கள் தமது சிறந்த ஆராய்ச்சித் திறனாலும்
நுண்பொருளை எளிதில் உணர்ந்து பிறர்க்கு உணர்த்தும் பண்பாலும், ஈர்க்கும்
எளிய நடையாலும் "தொன்மைச் செம்மொழி” என்ற இந்த நூலை வழங்கியுள்ளார்.
இந்நூலில் தமிழ்ச் சுவை மிகுந்த இருபத்து இரண்டு கட்டுரைகளும் அதை
ஆதாரப்படுத்தும் பின் இணைப்புகளும் அடங்கியுள்ளது. குமரிக்கண்டம் தொடங்கி
திராவிடர் நாகரிகம் குறித்தும் சங்க இலக்கிய மரபுகள் - சங்கத் தமிழ்
வாழ்வியல் குறித்தும் கட்டுரைகளில் தொகுத்தளித்துள்ளதுடன், தற்காலம்
நம்மோடு வாழ்ந்த அரசஞ்சண் முகனார், பெரியார், பேரறிஞர் அண்ணாவின் கல்விச்
சிந்தனைகள் குறித்த கட்டுரையும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளது
குறிப்பிடத்தக்கதாகும்.