
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.89

Opening the world of stories

Free shipping over ₹500
✓ Ready to ship
அன்புள்ள டயரி……..இன்றைய தினம் என்னை மிகவும் காயப்படுத்தி விட்டது. நான் எதைச் செய்து இதை மறக்கவென்று தெரியவில்லை. வாழ்க்கை என்றால் இன்னது தான் என்று இன்பத்தை மட்டும் அனுபவித்துக் கொண்டிருக்கும் என்னைப்போன்றவர்களைத் தாண்டியும் நிகழும் சில விடயங்கள் மிக துயரம் சுமப்பவையே…..என் வாழ்நாளில் சில விடயங்களை நினைத்துப் பார்க்கவே முடியாதபடி கஷ்டமாக இருக்கும். இனிமேல் இப்படி யாருக்கும் நடந்து விடக் கூடாது என்ற பரிதாபமும், கவலையும் மேலெழும். வழமையாக 9 மணிக்கெல்லாம் உறக்கம் என்னை அரவணைத்து விடும். ஆனால் இன்று தலையணைக்கடியிலும் போர்வைக்குள்ளும் முகம் புதைத்து தேடித்தேடி அலைந்தும் உறக்கம் என்னை அண்டி விடாதபடி என் மனதை அரட்டிக் கொண்டிருக்கும் விடயம் என்னைப் பொருத்தவரை ஏற்றுக் கொள்ள கடினமானது தான்.
காலையில் பழைய பள்ளித்தோழி வீட்டுக்கு வந்திருந்தாள். ஏதொவொரு எழுத்து ரீதியான உதவி தேடி வந்திருந்தாள். பாடசாலை ஒன்றில் ஆரம்ப வகுப்பு ஆசிரியராக இருக்கும் அவள் கொண்டு வந்த செய்தி தான் என்னை கொஞ்சம் அதிகமாகவே வதைத்துக் கொண்டிருக்கிறது. உயர்தர மாணவிகளின் அன்றாடத் தோழியான அவள் தெரிந்து கொண்ட ஒரு மாணவியின் கதை தான் அது……