என்னைத் தட்டி உருவாக்கிய, சிலிர்க்க வைத்த, அழ வைத்த, சிரிக்க வைத்த அந்தத் தருணங்களை, அவை எழுதிப்போன சிந்தனைகளை இன்னும் என் மனப்பலகையில் வைத்துக்கொண்டு திரிகின்றேன். அந்தத் தருணங்களில், அந்த சிந்தனைகளின் தாக்கத்தில் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஓடிய உள்ளக்கிடக்கையின் வெளிப்பாடே இதில் இருக்கும் கட்டுரைகள். வேறு வேறு கால கட்டங்களில் இணையத்தில், பத்திரிகைகளில் வெளியான என் கட்டுரைகள் இதோ ஒரு நூலாக ‘மனப்பலகை’.