ஒரு விதையை, ஒரு தளிரை நோக்கும்போது அதன் விருட்சம் புலனாவதில்லை . ஒரு சுடரை நோக்கும் போது அது எரிக்கவிருக்கும் வனம் புலனாவதில்லை . அரவிந்தனின் கவிதைகள், அப்படியானவைதான். இளமைக்கே உரிய வேகமும் கோபமும் அங்கே கொப்பளிக்கின்றன. சில நேரங்களில் வசனத்தில், சில நேரங்களில் சந்தத்தில். எதிரியை , விரைந்து தாக்க நினைக்கும் வீரனின் புரவியைப் போல் அவனுடைய தமிழ் அக்கோபத்தைச் சுமந்து செல்கிறது. அந்தக் கோபத்தையும் வீரத்தையும் கொட்டும் தமிழையும் இளமை மாறாமல் பதிவு செய்து வைத்து விடுவதே இந்த நூலின் நோக்கம். இது ஒரு விதையின் வரைபடம். ஒரு சுடரின் புகைப்படம். அவ்வளவே.