பறவைகள், விலங்குகள், செடி, கொடிகள், வானம், பூமி, கோள்கள், இயற்கை அமைப்புகள், மனிதனின் உணவு, உடை, உறவிடம், வாழ்க்கை நிலைகள் ஆகியவை தொடர்பான உண்மையான நிகழ்வுகளை, கதையாக்கி கூறுவது உண்மை கதைகளாகும். மக்கள் வாழும் இடங்கள், காலநிலை, தட்பவெப்பநிலை இயற்கை அமைப்புகளான ஆறு, குளம், ஏரி, கடல், ஆழி, மலைகள், பள்ளத்தாக்குகள், கண்டங்கள், அவற்றில் இயற்கை ஏற்படுத்தும் மாற்றங்கள், சீற்றங்கள், தொழில்கள், விளைச்சல் பயிர்கள், ஒவ்வொரு கால கட்டத்திலும் அவை எவ்வாறு பயன்படுத்தப்பட்டது, எவ்வாறு வளர்ச்சி அடைந்தன என்பவற்றையும் மக்கள் வாழ்க்கை நிலைகளையும் உண்மைக் கதைகள் வாயிலாகக் கூற முடியும். மாணவர்களின் கற்பனையைத் தூண்டுவதாகவும், அறியும் அறிவை வளர்ப்பதற்காகவும், நினைவாற்றலைப் பெருக்கவும் கதைகள் உதவும்.