ஒரு கதையை படித்துணரும் போது அது சமுதாயத்திற்கு என்ன சொல்ல வருகிறது என்று பார்ப்பதைக் காட்டிலும் சிறார்களுக்கு என்ன சொல்கிறது என்பதில்தாம் சிறப்பு இருக்கிறது. வளர்ந்த பின்பு சொல்லப்படும் தத்துவமும், அறிவுரையும் செல்லாது; அதைக் குழந்தையிலேயே தட்டிக் கொடுத்து சொல்லிக் கொடுப்பதிலேதாம் ஓர் எதிர்காலத்தின் வளர்ச்சி இருக்கிறது.