எழுதப்பட்ட கால இடைவெளிகளைத் தாண்டியும் நீர்த்துப் போகாத வாசிப்பனுபவத்தை
இந்த நாவல்கள் தக்க வைத்துள்ளன. காரணம் நாஞ்சில் நாடனின் சித்தரிப்பு
நேர்த்தியும் கதை சொல்லும் உத்தியுமே பழகத் தொடங்கும் வாசகனை உள்ளிழுத்துக்
கொள்ளும் வலிமையான மொழியும், தொடர்ந்து அவனை இருத்தி வைத்துக் கொள்ளும்
உரமுமே நாஞ்சில் நாடனின் எழுத்துக்களை ஜீவனுடன் வைத்துக் கொண்டுள்ளன.
கிராமங்களை அதன் எல்லாப் பரிமாணங்களுடனும் வாசனைகளுடனும் நாஞ்சில் நாடன்
தனது படைப்புகளின் வழியாக சித்தரித்த அளவு வேறொரு படைப்பாளி இன்று வரை
சாத்தியப்படுத்தியதில்லை என்று சொன்னால் அது மிகையாகாது.
எம். கோபாலகிருஷ்ணன்