மனிதன்
காலங்காலமாகவே நோய் என்பதை எதிர்மறையாக நினைத்து வந்திருக்கிறான். இதனால்
நோய் என்ற கருத்து சாபமாகவும், பாவமாகவும், கருதப்பட்டுவருகிறது.
நீங்கள் கேட்பது நன்றாக புரிகிறது நோய் வந்தால் - மனிதன் துன்பந்தானே
படுகிறான், பின்பு எப்படி அது ஆசிர்வாதமாகவும் வரமாகவும் இருக்க முடியும்?
ஆம், ஒரு கோணத்தில் பார்த்தால் நோய் என்பது மிகவும் துன்பகரமாகவும்,
வலிமையற்றதாகவும் இருப்பதை நம்மால் தெளிவாக உணரமுடிகிறது. இது முற்றிலும்
சரியே. ஆனால் அதுவும் ஒரு பாதிதான் சரி. ஏனென்றால் ஒரு நாணயத்திற்கு இரண்டு
பக்கங்கள் இருப்பதுபோல நோய்க்கும் இரண்டு பக்கங்கள் உள்ளன.