பெ.மாடசாமி TPS அவர்கள் B.Sc., பட்டதாரி. இவர் தமிழில் கவிதை, கட்டுரை
எழுதுவது மட்டுமன்றி நல்ல பேச்சாளர். இவர் 34 ஆண்டுகள் தமிழக
காவல்துறையில் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு. நுண்ணறிவு பிரிவு,
மதுவிலக்கு பிரிவு, குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு,
பாதுகாப்பு பிரிவு, மத்திய குற்றப் பிரிவு, பயிற்சி மற்றும் நவீனமயமாக்கல்
பிரிவு, காவல் பயிற்சி பள்ளி மற்றும் ஒருங்கிணைந்த குற்றங்கள் நுண்ணறிவு
பிரிவு ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார், காக்கி கதிர்வீச்சுக்கு இவர்
கட்டுடம்பும் ஒரு காரணம். காக்கியின் மீது கொண்ட காதலின் காரணமாக
இத்துறைக்கு வந்து, பணியாற்றியதைப் பற்றி எழுதியுள்ளார்.