பாப்லோ நெருடாவை ஒருவள் பெற்றுக்கொள்ளுதல் என்பது, அவருடைய ஆணாதிக்க/வயமூட்டும்/தன்னல + தன்னகங்காரமிக்க கருத்துக்களை காவி வருகிற எழுத்துக்களை, ஒரு 'பெண்'ணாய் அக்கணம் தகவமைத்து பழக்கப்படுதல் என்பதுடன் இணைந்துதான் நிகழ்கிறது. அவரை ஒரு பெண் மொழிபெயர்ப்பது, அவரது 'புகழ்பாடலால்' (glorification) நெகிழ்ச்சிக்குண்டான மனோநிலையுடனேயே நிகழும். இதனால் ஒரு ஆண் அவரை உள்வாங்கி, அவரது உளத்தளத்தை –அரசியல், சமூக- பின்புலத்தை அடைந்து கவிதைகள் ஒருவனால் மொழிபெயர்க்கப்படுவது உகந்ததாய்ப் படுகிறது (அவரது அரசியலை/காதலை ஆண்கள்தான் தமிழில் பெயர்த்திருப்பார்கள்).