வாழ்க்கையின் சகல தரப்பு மனிதர்களையும் ஒரு கேமரா மாதிரி வெளியில் நின்று வேடிக்கை விமர்சனமற்று வேடிக்கை பார்க்கிறது சபா.இராஜேந்திரனின் படைப்புலகம். பலம், பலவீனங்களைப் பற்றி மனிதர்கள் மட்டுமே கவலைப் படுகிறார்கள், கேமராக்கள் கவலைப்படுவதே இல்லை. அடுத்தவரின் பார்வைக்குக் காட்சிகளைப் பதிந்து அனுப்பும் பணியை மட்டுமே செய்கின்றன. உள்ளங்கையில், வியப்புகளையும், வினோதங்களையும் மூடி வைத்திருக்கும் வாழ்க்கையின் விரல்களை சபா.இராஜேந்திரன் பிரித்துப் பார்க்கும்போது, அங்கு ஆச்சரியங்களும், அதிர்ச்சிகளும் நிறைந்த ஒரு சமவெளி விரிகிறது. அவரவர் வாழ்க்கை அனுபவங்களுக்கு ஏற்ற புரிதல்களோடு அந்தச் சமவெளியில் நமது பயணமும் தொடர்கிறது! ISBN எண்: 978-981-08-0659-0