மனிதனது கருத்துக்களில் உள்ள ஒவ்வொரு வேறுபாடும், ஒரு புற முரண்பாட்டையே எதிரொலிக்கின்றது புற முரண்பாடுகள் அகச் சிந்தனையில் பிரதிபலிக்கின்றன. இதுதான் எதிரும் புதிருமான கருத்துகள் முட்டி மோதுகிற இயக்கத்தை உருவாக்குகிறது. இது சிந்தனையின் வளர்ச்சியை முன்தள்ளுகிறது. மனித சிந்தனையின் பிரச்சினைகளைத் தொடர்ந்து தீர்த்து வைக்கிறது.
அதாவது ஒரு வாக்கியத்தில் அல்லது ஒரு சொற்றொடரில் இருக்கும் வார்த்தைகள் முன்னுக்கு பின் முரண்பாடாக இருக்கும். கிட்டத்தட்ட எதிரிகள் மாதிரி. இந்த சிறிய புத்தகத்தில் “முரண்பாடுகள்” பற்றிய அரிய தகவல்களை கொடுத்துள்ளேன். தகவல்கள் முழுவதும் படித்து விடுங்கள். மேலும் தகவல்களை மெதுவாக மெதுவாக படியுங்கள். ஏன் என்றால் முக்கியமான தகவல்கள் ஒவ்வொரு பத்தியிலும் ஒளிந்து கொண்டிருக்கின்றன. நீங்கள் இயல்பாக படிக்கும்போது, உங்களை அறியாமலே உங்கள் இதழ்கள் விரிந்து உங்கள் முகத்தில் புன்முறுவல் பெருகுவதை உங்களால் உணர முடியும். கண்டிப்பாக உங்கள் நேரம் பயனுள்ளதாக கழியும் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கையுண்டு. இந்த புத்தகத்தை படிக்க உங்களுக்கு வெகு நேரம் ஆகாது. அதிக பட்சம் பத்து நிமிடங்களுக்குள் இந்த புத்தகத்தை நீங்கள் படித்து முடித்து விடலாம்.