பசியை அடக்க உணவு என்பது மாறி, ஒரு கட்டத்தில் நாவின் ருசியை அடக்க விதவிதமான பண்டங்களை மனிதன் கண்டுபிடிக்கவும் உருவாக்கவும் ஆரம்பித்த போது, முற்றிலும் புதிய ,வண்ணமயமான ஓர் உலகம் உருப்பெற்று எழுந்தது.இந்தக் கணம் வரை உலகில் புழங்கும் அத்தனை விதமான உணவு வகைகளும் ருசிக்கான தேடலின் விளைவே.