காலத்தைக் கடந்து நிற்கும் இலக்கியச் சிகரம், ஷேக்ஸ்பியர். அவர் தாக்கத்துக்கு உட்படாத நாடோ, மொழியோ, பண்பாடோ உலகில் இல்லை என்றே சொல்லிவிடலாம். எழுதப்பட்டு 400 வருடங்களைக் கடந்த பிறகும் அவர் எழுதியவை தொடர்ந்து மேடையேற்றப்படுகின்றன. தொடர்ந்து கொண்டாடப்படுகின்றன. தொடர்ந்து மொழிபெயர்க்கப்படுகின்றன, ஆராயப்படுகின்றன.
இந்நூல் ஷேக்ஸ்பியரின் அற்புதமான நகைச்சுவை நாடங்களை எளிமையாக நமக்கு மறு அறிமுகம் செய்கிறது. வரிக்கு வரி மொழிபெயர்க்காமல் சாரத்தை ஒரு கதை போல் விவரித்துவிட்டு, நாடகத்தில் ஷேக்ஸ்பியர் சொல்லிய கருத்துகள், அவற்றுக்கு இருந்த வரவேற்புகள், எதிர்ப்புகள் எனப் பரந்துபட்ட பார்வையை வழங்குகிறார் வானதி.