வாழ்க்கை என்பது முட்டாள் ஒருவனால் எழுதப்பட்டகதை' என்று கூறிய ஷேக்ஸ்பியர் ஆங்கில நாடக உலகில் புகழ்பெற்ற
மேதையாகத் திகழ்ந்தார். அவர் எழுதிய முப்பத்தேழு நாடகங்களும் எழுத்துலகில் என்றும் நின்று நிலைப்பவை. ஷேக்ஸ்பியர்
நாடகங்களில் 'மெக்பெத் திகில்கள் நிறைந்த நாடகம். பிரமிப்பு கெடாமல் அத்தனை காட்சிகளையும் அத்தியாயங்களாக்கி நாவல் வடிவில் வடிவமைத்துத் தந்திருப்பவர் மொழிவளம் வாய்ந்த எழுத்தாளர் ஜே. கே. இராஜசேகரன் அவர்கள். நாடகத்தை நாவலாக்கி வாசகல்களைப் கடிக்கத்தூண்டுகிறார். வார்த்தைகள் மட்டும் தமிழாக்கம் செய்யப்படவில்லை. ஒவ்வொரு பாத்திரங்களின் உள்ளுணர்வுகளும் தமிழால் வார்க்கப்பட்டிருக்கின்றன. திடுக்கிடும் கொலைகள் நிறைந்த நாடக்க் காட்சிகளின் உரையாடல்களைக் கூர்வாளின் முனைப்போல் கையாண்டு தமிழாக்கம் செய்திருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு. பதவி போதையில் பாதைமாறிப் போய் வாழ்விழக்கும் மெக்பெத் போல் யாரும் வாழக்கூடாது என்ற படிப்பினை , மனைவிசொல் கேட்டு மனச்சிதைவுக்கு ஆளாக்கூடாது என்ற எச்சரிக்கை இந்நூலைப் படிப்பதன் மூலம் விளங்கும்.
- பதிப்பகத்தார்.