ரஷ்ய பெரல்மான் எழுதிய நூல் ரா. கிருஷ்ணையா அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. பதினொரு
அத்தியாயங்களைக்கொண்ட இந்நூலில் வித்தியாசமான தலைப்பில் பலவகையான புதிர்கள் இடம்பெற்றுள்ளன. தலைமுடியின்
ஆயுட்காலத்தைக் கண்டுபிடிக்கும் புதிய கணக்கு முறை வியப்பளிக்கிறது. வினோதமான பெருக்கல் முறை, பதினொன்றால் வகுத்தல், அசுர எண்கள், ஒவ்வொருவருடைய காலடியையும் சென்டிமீட்டர், மீட்டர் அளவுக்கு மாற்றி அவசரத்துக்கு அளவு கோல் இல்லாமலேயே அளப்பது எப்படி என்னும் எளிய முறை கூறப்பட்டுள்ளது.
மழை நீரின் அளவு, பெய்த பனியின் அளவு எவ்வளவு என்று கணக்கிடும் முறை கூறப்பட்டுள்ளது. விவலியத்தில் கூறப்பட்டுள்ளது போல் நோவாவால் பெரிய கப்பல் செய்திருக்க முடியுமா? உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் ஒரு ஜோடி என்று எடுத்து அந்தகப்பலில் வைக்க முடியுமா? என்று ஆச்சரியத்தை உண்டாக்கும் முறையில் கணப்கெடுத்து அவ்வளவு பெரிய பிரம்மாண்டமான உருவாக்க முடியுமா? என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. கணிதத்திற்கென்று வேறுபட்ட பலவகையான நூல்கள் வந்திருந்தாலும், இந்நூலின் அணுகுமுறை படிப்பவர்களுக்கு எளிதில் புரியக்கூடிய வகையில் உள்ளது.
- பதிப்பகத்தார்.