புகழும், செல்வாக்கும், கௌரவமும் கொண்ட ஒரு பராம்பர்யம் மிக்க நல்ல குடும்பத்தில் குணம் கெட்ட ஒரு பிள்ளை பிறந்து அந்த வீட்டின் கௌரவத்தையே கெடுக்க முனையும் போது குற்றச் செயல்களுக்காக போலீசாரால் பிடிபட்டு சிளைக்கு போவதை விரும்பாத தகப்பனார் தன் வீட்டிலேயே ஒரு சிறைக்கூடத்தை கட்டி அந்த சிறையில் தன் மகனை தான் இறக்கும் வரைக்கும் அடைத்து வைக்கிறார்.தந்தை செய்த சிறை தண்டனையில் மகன் திருந்தினான் என்றால் அதுதான் இல்லை. மேலும் மேலும் அவன் குற்றங்களை செய்துகொண்டே போகிறான்.அவனுடைய குற்றங்களையும் அவனைச் சுற்றியுள்ளோர் செய்யும் குற்றங்களையும் கண்டுபிடிக்கும் ஒரு துப்பறியும் கதைதான் செந்தாமரை வாடாது நாவல்