ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு, அதிலும் குறிப்பாக, முந்தைய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு மனதிற்குள் ஒரு வெறியும், முனைப்பும் இருக்கும். இந்த முறையும் பதக்கத்தை வென்றுவிட வேண்டும் என்பதல்ல, கடந்த முறை நிகழ்த்திய தனது சாதனையை இந்த முறை தானே முறியடித்து, புதிய சாதனை படைக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் வெறியும் முனைப்புமாக இருக்கும்.