கட்டுரையைப் படித்த தமிழாசிரியை ஸ்டாப் ரூமில் அழுது விட்டாராம். பக்கத்தில் இருந்த சரித்திர ஆசிரியையும் கண்ணீர்விட, மறுநாள் ஸ்கூல் அசெம்பளியில் என் கட்டுரை வாசிக்கப்பட்டது. அவருக்கு ஏதோ பெரிய நீதியை வாங்கிக் கொடுத்த திருப்தி எனக்கு. இந்தக் கட்டுரைதான் ஒரு பறவையின் சரணாலயம் என்ற இந்த நாவலுக்குக் கடைக்கால் என்று கூறலாம்.