உலகளாவிய மந்திரச் சடங்குகளைப் பிரிக்கும் வகைகள் இந்நூலில் இயற்கையாக அமைந்துள்ளன. இந்நூலில் காணப்படும் உண்மைகள் நாட்டுபுறங்களில் இன்றைய நிலையில் காணத்தக்கவை. அம்மாக்கள் வாழ்வில் தாக்கம் பெற்றவை. இச்சடங்கு முறைகளால் நாட்டுப்புற மக்கள் பெறும் நன்மைகள் உண்டென்றாலும், அறிவியல் நோக்கில் காணும்போது அவர்கள் பெறும் பாதிப்புகள் அதிகம் என்றே கூறவேண்டும். மறைபொருளக மேற்கொள்ளும் இச்சடங்குகளில் இலைமறை காய்மறையாய் சில நன்மைகள் உண்டு. எனினும், அவை தரும் தீமைகளை நோக்கும்போது, இம்மந்திரச் சடங்குகள் ஏற்படுத்தும் பாதிப்புகளை யாவரும் அறியச் செய்தல் சால நன்று.