சினிமாத் துறையில் பெரும் பெயர் பெற்றிருத்த அவர்கள், கம்பன் கழகத்தோடு தொடர்பு கொண்டதிலிருந்து, கழகத்தின் வளர்ச்சியிலும், கம்பனுடைய கவிநயத்தைப் பருகுவதிலும், முழுமையான ஈடுபாடு கொண்டிருந்தார்கள். ஒவ்வோர் ஆண்டும் தாம் தலைவராக இருந்து ஏவி.எம். இராஜேஸ்வரி கல்யாணமண்டபத்தில் கம்பன் விழா நிரந்தரமாக நடைபெறுவதற்கு வழி வகுத்ததோடு, கழகத்திற்கு அவ்வப்போது தேவையான உதவிகள் அனைத்தையும் நிறைந்த உள்ளத்துடனும், மட்டற்ற மகிழ்ச்சியுடனும் செய்து வந்தார்கள். அன்னாருடைய மறைவுக்குப் பின் அமரர் ஏவி. எம். அவர்களின் குடும்பத்தினர், அதே ஈடுபாட்டையும், அக்கறையும் காட்டி வருகிறார்கள்.