தமிழ்ப் புலவர்கள் எழுதிய வசன நூல்கள் அரிய தமிழ் நடையில் எழுதப் பெற்று, அவர்களைப் போலவே தமிழ் நன்கு பயின்ற சிலருக்கும், பரீட்சைக்குப் படிக்கும் மாணாக்கர்களுக்குமே பெரிதும் பயன்பட்டன.
தமிழ்த்தாயின் ஆபரணங்களாயுள்ள சிறந்த பழந்தமிழ் நூல்கள் பலவற்றை வெளியிட்டுத் தமிழ் நாட்டுக்குப் பேருபகாரம் செய்த அய்யர் அவர்கள், சமீப காலத்தில், எளிய தமிழ் நடையில் அநேக கட்டுரைகள் எழுதி வெளியிட்டிருக்கிறார். அவை, சிறு குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த அறிஞர்கள் வரையில் எல்லாரும் ரசித்து அனுபவிக்கக் கூடியவையாக இருக்கின்றன.