இது என்னுடைய இரண்டாவது சரித்திர நாவல். நான் முதலாவது என்று
மனப்பூர்வமாக நினைக்கக் கூடிய இந்த நாவல் படைத்த முறைப்படி வருகிற
எண்ணிக்கையில் இரண்டாவது வரிசையில் நிற்கிறது. இந்த நாவலை எழுதத்
திட்டமிடுவதற்கு முன்பே சில கொள்கைகளைச் சிறப்பாகவும் சிரத்தையாகவும்
வகுத்துக் கொண்டேன் என்பதை நான் இப்போது மீண்டும் நினைவு கூர்கிறேன்.
வரலாற்றையே முழு நிலைக்களனாக எடுத்துக் கொள்ளாமல் வரலாற்றுப்
பின்னணியையும், சூழ்நிலைகளையும் அமைத்துக் கொண்டு அழகும் ஆழமும் மிகுந்த
ஒரு கதையைப் புனைய வேண்டுமென்று நான் எண்ணியிருந்த எண்ணம் இந்த நாவலில்
ஓரளவு நன்றாகவே நிறைவேறியிருக்கிறது. இந்த நாவல் பொழுதுபொக்கிற்கு
மட்டுமன்று ,சிந்தனைக்கும் சேர்த்துதான். இதில் அழகு எவ்வளவு உண்டோ
அவ்வளவிற்கு ஆழமும் உண்டு. படிப்பவர்கள் அந்த நோக்குடன் இதைப் படிக்க
வேண்டும். -நா.பார்த்தசாரதி