கலைஞர்
மீதும், கலைஞர் தமிழின் மீதும் கொண்ட பற்றினால், கலைஞரைப்பற்றி ஏதாவது
ஒன்றை எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற பேராவலின் காரண மாக அவர் வரைந்த
குறளோவியத்தையும் சங்கத்தமிழையும் தொல்காப்பியப் பூங்காவையும் தமிழோவியமாக
உங்கள் கைகளில் தவழ விட்டிருக்கிறேன். - கலைஞர் வாழும் காலத்தில் நாம்
வாழ்வதே நமக்குப் பெருமை! முதுபெரும் தலைவர் தமிழ்நாட்டை வழிநடத்தியவர்.
தமிழையும் வழிநடத்துவதோடு, அவர் தொடாத துறையே இல்லை எனலாம். இந்நூலில் உள்ள
ஏழு கட்டுரைகளிலும் வானவில்லைப்போல வண்ணமுடன் என் எண்ணத்தைப் பதிவு
செய்திருக்கிறேன். வாரத்தின் நாள்கள் ஏழு. (கடையெழு)வள்ளல்கள் ஏழு.
வள்ளுவன் தந்த குறளின் சீரும் ஏழு. அதன்படி இந்நூலின் கட்டுரைகளும் ஏழு.
ஏழு கட்டுரைகளில் முதல் கட்டுரையின் தலைப்பையே நூலுக்குச்
சூட்டுவது மரபு என்ற காரணத்தினால் முதல் கட்டுரையே நூலுக்குத் தலைப்பாகி
உள்ளது.