முனைவர் கு. இராசரெத்தினம்...
சு.குப்புசாமி - சேது அம்மாள் இணையருக்கு 24.4.1957இல் மகனாகப் பிறந்தார். புகுமுக வகுப்பு முதல் முதுகலைவரை (1974-1980) கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரியில் பயின்றார்.
ஆய்வு நிறைஞர் பட்டத்தைத் (1983) திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியிலும் முனைவர் பட்டத்தினைப் பாரதிதாசன் பல்கலைக் கழகத் தமிழியல் துறையிலும் பயின்று பெற்றார்.
சிறந்த பட்டிமன்ற. வழக்காடு மன்றப் பேச்சாளராகிய இவர், திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியில் தமிழ்த் துறைத்தலைவராகவும். இணைப்பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.