இலக்கிய வீதி;ஒரு கவிதையை பொறுமையாக படித்து ருசித்துப் பார்க்கும் இதயம் ஒரு சிலரிடம் தான் இருக்கிறது. வாழ்க்கையின் சுழற்சியில் பின்னிக்கொள்ளும் அல்லது ஒட்டிக்கொள்ளும் வாழ்க்கைச்சுழல்களில் நின்று நிதானித்துப் படிக்கும் பழக்கும் மிக்க்குறைவென்றே சொல்ல்லாம்.இருப்பினும் வெளியூர் செல்லும் பயணத்தின் நடுவே ஓருரில் நிற்கும் பேருந்து நிறுத்த்தில் ஒருபாக்கெட் நாவலோ, அல்லது தினசரி வாரப் பத்திரிகைகளோதான் வாங்கிப் படிக்கத் தோன்றுகிறது.
தமிழ் இலக்கியத்தில் ஆய்ந்து அறியவேண்டிய நல்ல நூல்களை தன் அனுபவத்தின் வாயிலாகஆய்ந்துதொள்ளத்தெளிவாக முன்வைக்கிறார்கள் பேராசிரியர் இருவர். முனைவர் மு. ஜோதிமணி அவர்களும் பேரா.க.உமாமகேஸ்வரி அவர்களும் ஒரு தமிழிலக்கியக்கூடத்தைக் கலைத்து சாறெடுத்துத் தந்திருக்கின்றார்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.இலக்கியம்
என்றால் ஓரடி தள்ளிநிற்கும் சில தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு தமிழ் மரபின் சுவையை தமிழர் பண்பாட்டின் வலிமையை வாழ்வியல் பக்குவத்தோடு சுவைத்துத் தரும் பாங்கு அப்படியே குடிக்கவேண்டும் போலிருக்கும்.பொதுவாய் இந்நூல்அறிஞர் பெருமக்களுக்குமட்டுமல்ல, கல்லூரி மாணக்கர்க்கும், வாசக பெருமக்களுக்கும் பயன்படும் வகையிலே
அமைந்திருப்பது நூலின் வளமையைக் கூட்டுகிறது.