ஒவ்வொரு நாட்டிலும் வாய்மொழிக் கதைகளாகச் சில கதைகள் வழங்குவது மரபு. அக்கதைகளில் ஏதேனும் ஒரு பாத்திரம் நகைச்சுவை வழி சிறந்த கருத்துகளையும், நீதிகளையும் எடுத்துக்கூறும். இவ்வகையில் அப்பாத்திரம் கோமாளியாகக் கருதப்படுவான். இக்கோமாளிகளின் கதைகள் அந்த ஒரு நாட்டுக்கு மட்டுமே சொந்தமானவை அல்ல. உலகமனைத்தும் சொந்தமானவை, தமிழகத்தில் தெனாலிராமனைப் போல, இலங்கையில் அந்த்ரேயைப் போல, சீன நாட்டின் கோமாளி அவாந்தி. சீன நாட்டின் முஸ்லீம்கள் வாழ்ந்த பகுதியில் வாழ்ந்த இவனது கதைகளின் தொகுப்பே இந்நூல்.