சமீப காலங்களில் முனைவர் பட்ட ஆய்வுக்கெனச் சேகரிக்கப்பட்டு அச்சிடப்படாத நாட்டுப்புறக் கதைத் தொகுப்புகளுள் சில சிறந்த தொகுப்புகள் காணப்படுகின்றன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
நாட்டுப்புறக் கதைகளைச் சேகரிப்போர், மக்கள் அவற்றை வெளிப்படுத்தும், அந்த மொழியிலேயே (பேச்சு நடையிலேயே) பதிவு செய்வார்கள். அச்சில் வெளிவரும்போது நடையைச் சிறிது மாற்றி அமைப்பது உண்டு. அந்த வகையில் இந்தப் பாடத்தில் நாட்டுப்புறக் கதைகள் இலக்கிய நடையில் தரப்பட்டுள்ளன.