இந்த பாதிப்பு உடையவர்களுக்கு, துாய ரத்தத்துடன், அசுத்த ரத்தமும் சேர்ந்து, உடல் முழுவதும் செல்லும் என்பதால், தோலின் நிறம் நீலமாக மாறிவிடும். மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும்; சில அடிகள் கூட நடக்க முடியாது. இதற்கான காரணம் கண்டறியப்படவில்லை.
ஆனாலும், இந்த நோய்க்கு, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையே தீர்வு. விபத்தில் மூளைச்சாவு அடைந்த விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த, 21 வயது வாலிபரின் நுரையீரலை தானமாக பெற்று, ஆன்ட்ரீக்கு பொருத்தினோம். இரு பக்க நுரையீரலும் மாற்றப்பட்டது. தற்போது, அவர் மறுவாழ்வு பெற்றுள்ளார். இரு பக்க நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை என்பது, தெற்கு ஆசியாவில், சென்னையில் தான், முதன்முறையாக வெற்றிகரமாக செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.