எக்காரியத்திலும் ஈசன் கிருபை தனித்த கருவியல்ல என்று யாரால் கூற முடியும்? வேதங்கள், புராணங்கள், பெரியோர் சரித்திரங்கள், பண்டைக் காலத்திலிருந்து வரும் அனுபவங்களெல்லாம் இதன் உண்மையை விளக்குகின்றன. பல ஆண்டுகளிலும், அரிய சாதுக்களும் தங்கள் செய்கைகளால் இதையே நிலைநாட்டியுள்ளார்கள்.