நமது பாரதநாடு ஆன்மீக பொக்கிஷத்தின் கலைப் பெட்டகம். உலக நாடுகளுக்கே ஒப்புயர்வற்ற தத்துவங்களை அள்ளிக் கொடுத்த ஞான பூமி. இந்த மண்ணில் அன்பையும், ஆன்மீகத்தையும், வழங்க வந்த ஞானிகளும், மேதைகளும், தொண்டர்களும் ஏராளம். சிவனடியார்களும், திருமாள் அடியார்களான ஆழ்வார்களும் செய்து கொடுத்த பக்தி இலக்கியங்கள் மிகவும் அதிகம். அவற்றில் இருந்து திரட்டப்பட்ட சில கதைகளை இங்கே உங்களுக்காக தொகுத்திருக்கிறேன்.