இந்நூல் ஆசிரியர் டாக்டர் க. விஸ்வநாதன் கோவை மற்றும் உதகை அரசு கலைக்
கல்லூரிகளில் தாவரவியல் பேராசிரியராக 33 ஆண்டுகள் பணியாற்றி சமீபத்தில் பணி
நிறைவு பெற்றுள்ளார். தற்போது இவர் கோவையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை
மற்றும் அறிவியல் கல்லூரியில் உயிர்அறிவியல் துறைத் தலைவராகப் பணியாற்றி
வருகிறார்.இவர் கோவை அரசு கலைக் கல்லூரியில்) பி.எஸ்சி. முடித்து விட்டு,
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எம்.எஸ்சி. பட்டமும், சென்னைப்பல்கலைக்
கழகத்தில் எம்.பில். ஆய்வுப் பட்டமும் பெற்றுள்ளார். பணியில் இருந்து
கொண்டே தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு பாரதியார் பல்கலைக்கழகத்தில்
பி.எச்டி. முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.படிக்கின்ற காலத்திலிருந்து
நேரத்தின் முக்கியத் துவத்தை உணர்ந்து, கால நிர்வாகத்தை கடைப்பிடித்து
வரும் இவர், தமிழில் மூன்று தாவரவியல் பாடப்புத்தகங்களை எழுதி
வெளியிட்டுள்ளார். தமிழ் ஆர்வம் கொண்ட இவர் பொது கட்டுரைகள் கவிதைகள்
மற்றும் அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளைப் பல்வேறு இதழ்களில்
வெளியிட்டுள்ளார்.