இந்தியக் குடியரசுத் தலைவர் என்பவர், இந்திய தேசத்தின் தலைவர் மற்றும் இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியும் ஆவார். இந்திய ஜனாதிபதி நாட்டின் முதல் குடிமகன் என குறிப்பிடப்படுகிறார்.[1][2] இந்திய அரசியலமைப்பின் மூலம் இந்த அதிகாரங்கள் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்ட போதிலும், இந்த நிலை பெரும்பாலும் சம்பிரதாயம் போன்ற ஒன்றாகும். உண்மையில் பிரதம மந்திரி செயலாற்றும் அதிகாரங்களை நடைமுறையில் கொண்டிருப்பார்.[3]
இந்திய குடியரசுத் தலைவர் என்பவர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதில்லை இருந்தபொழுதிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தின் உறுப்புகளாகிய, மக்களவை மற்றும் மாநிலங்களவை, மாநில சட்டப் பேரவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இந்திய அரசியலமைப்பின் பகுதி V கட்டுரை 56 இன் படி, குடியரசுத் தலைவர் ஐந்தாண்டு காலம் பதவியில் இருக்கக்கூடும். குடியரசுத் தலைவரின் அலுவல் காலத்தின் பொழுது பதவிநீக்கம் செய்யப்படும் நேரங்களில் அல்லது குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இல்லாத நேரங்களில் துணை ஜனாதிபதி குடியரசுத் தலைவர் பொறுப்பினை ஏற்றுக்கொள்கிறார். பாகம் V இன் 70 வது பிரிவின் படி, எதிர்பாராத தற்செயல் நிகழ்வின் பொழுது குடியரசுத் தலைவர் எவ்வாறு செயல்படுவது அல்லது அவரின் பொறுப்பினை பறிக்க வேண்டிய காலங்களில் பாராளுமன்றம் கூடித் தீர்மானிக்கலாம்.